என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வலங்கைமான் தற்கொலை
நீங்கள் தேடியது "வலங்கைமான் தற்கொலை"
வலங்கைமான் அருகே படிக்காததை தந்தை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வலங்கைமான்:
இதுபற்றிய புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்காததை தந்தை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்த சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு திறமைகள் வாய்ந்த மாணவர்கள் படித்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று கருதி அவர்களை கட்டாயப்படுத்துவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம். படிப்பு வராத மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று தன்னம்பிக்கை அளித்தால் மாணவ-மாணவிகள் உயிரிழப்பை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நரிக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் யோகேஷ் (வயது 17). இவர் வெலப்பகோவிலில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி ஆவூர்அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 9-ந் தேதி அவர் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில் அங்கு சென்ற சேகர், சரியாக படிக்காமல் ஊர் சுற்றி திரிவதாக கூறி யோகேசை கண்டித்துள்ளார்.
இதில் மனமுடைந்த யோகேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்காததை தந்தை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்த சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு திறமைகள் வாய்ந்த மாணவர்கள் படித்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று கருதி அவர்களை கட்டாயப்படுத்துவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம். படிப்பு வராத மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று தன்னம்பிக்கை அளித்தால் மாணவ-மாணவிகள் உயிரிழப்பை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X